உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக....

Monday, December 7, 2009

சிந்திக்கவும், செயல்படவும் ???

தற்செயலாக இணையத்தில் கீழ்கண்ட பதிவை கண்ட போது வேடிக்கையாக இருந்தாலும் சிந்திக்க தூண்டியது.






"நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்;. நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

அவன் தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான்; அன்றியும், உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்; உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை.

(நபியே!) நீர் கூறுவீராக "மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்."

திருக்குர்ஆன்
நன்றி அன்போடு உங்களை

Saturday, December 5, 2009

முஸ்லிம்கள் விரும்புவது.....

டிசம்பர் 6 1992, இந்தியா உலக அரங்கில் தனது பெருமை குறைந்து கொண்டு தலை குனிந்த நாள்.இது யாரால் நடைப்பெற்றது என்று தெரியமால் முழித்து கொண்டு இருந்த இந்திய மக்களுக்கு லிபரான் கமிசன் அறிக்கை முலம் வெளிப்படுத்தி விட்டது.
(வேற என்னத்த சொல்றது... மக்கள் வரிபண்த்தில் 8 கோடி ருபாயை செலவில்,முழுமையான ஆதாரங்கள் இருந்தும்,17 வருடங்கள் எடுத்து கொண்ட லிபரான் கமிசன் அவசியத்தை இப்படிதான் சொல்ல வேண்டும்)

அதிலும் இந்த அறிக்கை, நடந்த சம்பவங்களுக்குக் காரணமாக இருந்தவர்களை அடையாளம் காட்டி உள்ளதே தவிர, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோர வில்லை.
இந்த நேரத்தில் முஸ்லிம்களின் எண்ண ஒட்டங்கள் எப்படி இருக்கும் என்பதை அத்திக்கடையான் தனது பிளாக்கில் எழுதியுள்ளார்.

அந்த கட்டுரை நடுநிலையாளர்களா நீங்கள்?