உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக....

Tuesday, March 23, 2010

டெபிட் கார்டாக இருந்தாலும் ஜாக்கிரதை

கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பது நம்மை கடனாளியாக்கும் என்றால், போகப் போக டெபிட் கார்டுகளை வைத்திருப்பது 'சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் கதை'யாகி விடும் போலிருக்கிறது.


"கிரெடிட் கார்டு இருந்தா நம்ம இஷ்டத்துக்கு வாங்கிட்டு அப்புறம் பில் வந்த பிறகு முழிப்போம். டெபிட் கார்டுல அப்படி இல்லையே. நம்ம அக்கவுண்ட்டில காசு இருந்த தானே அதை உபயோகிக்கவே முடியும். அதனால டெபிட் கார்டு பிரச்னையே இல்லை" என்று சொல்லும் ஆசாமியா நீங்கள்?
creditcard.com இணையமும் யாஹூவும் இணைந்து வழங்கும் இந்த அட்வைஸ்களைப் பாருங்கள்...
"பாக்குறதுக்கு கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ரெண்டுமே ஒண்ணாத் தான் இருக்கும். ஆனா ரெண்டு (பிளாஸ்டிக்கு அட்டையு)ம் ஒண்ணு இல்லைன்னு எல்லாரும் புரிஞ்சுக்கணும். ரெண்டு வகையான கார்டுகளிலும் எப்படி பரிவர்த்தனை செய்யப் படுகின்றன, எப்படி அவை பாதுக்கக்கப்படுகின்றன என்பதில் எல்லாம் நிறைய மாற்றங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்."

- John Breyault, director of the Fraud Center for the National Consumers League,
a Washington, D.C.-based advocacy group

பொதுவாகவே ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது டெபிட் கார்டை உபயோகிப்பதை தவிருங்கள் என்பது தான் பெரும்பாலானோர் கருத்து. ஏனெனில் அது நம்முடைய வங்கிக் கணக்குடன் நேரடித் தொடர்பில் இருக்கிறது. யாராவது அதிலிருந்து பணத்தை உருவினால் மொத்தமாக உருவி விடலாம்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு கீழ்கணட பத்து சந்தர்ப்பங்களில் டெபிட் கார்டை தவிருங்கள் என்று பட்டியலிட்டுள்ளார்கள். முயன்று பார்ப்போமா?










1. போன் ஆர்டர் மற்றும் ஆன்லைனில் டெபிட் கார்டை தவிர்க்கவும். (காரணம் மேலே சொல்லியாச்சு!)

2. கார், வீடு போன்ற பெரிய அளவிலான பொருட்களை வாங்கும் போது டெபிட் கார்டினை தவிர்க்கவும். சமயங்களில் கிரெடிட் கார்டுகளை இந்தச் சமயத்தில் உபயோகித்தால் இலவச இன்சூரன்ஸ் போன்ற சலுகைகள் கிடைக்கலாம்.

3. வாடகைக்கு கார் எடுக்கும் போதோ அல்லது அது போல டெபாஸிட் கேட்கும் போதோ கிரெடிட் கார்டை உபயோகிக்கவும். வீணாக நம்முடைய பணம் முடங்குவதை தவிர்க்கலாம். கடைசியாக பில் செட்டில் செய்யும் போது தேவைப்பட்டால் டெபிட் கார்டிலோ, காசாகவோ செலுத்திக் கொள்ளுங்களேன்.

4. ரெஸ்டாரெண்ட்டுக்கு போறீங்களா? தப்பித் தவறி கூட டெபிட் கார்டு கொடுத்திடாதீங்க. எந்தப் புத்தில எந்த பாம்பு இருக்குமோ? உங்க கண் பார்வையிலிருந்து விலகி உங்களுடைய கிரெடிட் / டெபிட் கார்டுகள் சென்று வரும் ஒரு சில இடங்களில் ரெஸ்டாரெண்டுகளும் ஒன்று.

5. ஆன்லைனா இருந்தாலும் சரி, நேரடியாக உபயோகிப்பதாக இருந்தாலும் சரி.. முதல் தடவையாக உபயோகிக்கும் இடங்களில் டெபிட் கார்டை தவிர்க்கவும். அங்களைப் பத்தி ஒண்ணுமே தெரியாதில்லையா?! பக்கத்து வீட்டுக்காரனுடைய பிரெண்டோட பிரெண்டு இங்கே வாங்கிருக்காராம் அப்படீன்னு எல்லாம் நினைத்து டெபிட் கார்டை எடுத்து நீட்ட வேண்டாம். ஏதாவது மன்னார் & கம்பெனியா இருந்தா பக்கத்து வீட்டுக்காரரோட பிரெண்டோட பிரெண்டா வந்து பதில் சொல்லப் போறாரு?!

6. காசை இப்போ கொடுங்க. பொருளை அப்புறமா வாங்கிக்குங்க என்பது மாதிரியான ஆபர்களின் போது டெபிட் கார்டு தவிர்த்தல் நலம்.

7. மாதத் தவணைகள், மாதா மாதம் கட்டணம் கட்டும் சேவைகள் போன்றவற்றில் டெபிட் கார்டை உபயோகிக்காதீர்கள். சமயங்களில் நாம் சேவையை ரத்து செய்த பிறகும் கூட அவர்கள் தொடர்ந்து நமது கார்டில் பணம் எடுத்துக் கொண்டிருக்க வாய்ப்புண்டு. கிரெடிட் கார்டாக இருந்தால் சண்டை போட்டு காசை திரும்ப வாங்குவது கிரெடிட் கார்டு கம்பெனியின் தலைவலி என்று இருந்து விடலாம். (கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டு!). ஆனால் டெபிட் கார்டில் அப்படி இல்லை. அதுவுமில்லாமல், தப்பித் தவறி நமது அக்கவுண்டில் பணம் இல்லாத நேரமாகப் பார்த்து இந்த சந்தாத் தொகைக்கு பில் வந்தால் அதற்கான அபராதத் தொகை மேற்படி கம்பெனி மற்றும் நமது வங்கி இரண்டிலும் தண்டம் அழ வேண்டியிருக்கும்.

8. நாலைந்து மாதங்கள் கழித்து செல்லவிருக்கும் சுற்றுலாவுக்கான ஹோட்டல், டிக்கெட் புக் செய்யும் போது டெபிட் கார்டு வேண்டாமே. அட்வான்ஸ் தொகை என்று ஒரு தொகை உடனடியாக நமது அக்கவுண்ட்டிலிருந்து கழிப்பதோடு, நான்கு மாதங்களுக்கும் மேலாக நமது டெபிட் கார்டு எண் எல்லாம் அநாவசியமாக அவர்களிடத்தில் இருக்கும். எங்கேயும் எதுவும் நிகழலாம்.

9. பெட்ரோல் பங்க், ஹோட்டல்கள் போன்றவற்றிலும் டெபிட் கார்டை தவிர்க்கவும்.

10. ATM-மெஷின்களில் பணம் எடுக்கச் செல்லும் போது கூடுமான வரையில் உங்களுக்குப் பழக்கப்பட்ட மெஷின்களிலேயே பணம் எடுக்கவும். அப்படிச் செல்லும் போது அந்த மெஷினில் ஏதாவது சந்தேகப் படும்படியாக மாற்றங்கள் தெரிகிறதா என்றும் கவனிக்கவும். மெஷினிலேயே ஆட்டையைப் போட்டு நம்மை அம்பேல் ஆக்கும் டெக்னாலஜி திருடர்கள் உலவ ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதால் அதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

நன்றி : மாயவரத்தான்

Sunday, March 21, 2010

எதிர்த்தவர்களாக வளரும் இஸ்லாம்

சமீபத்தில் (விடியல் வெள்ளி என்று நினைக்கிறேன்) ஒரு இசுலாமிய இதழிழ் ஒரு கட்டுரை படிக்க நேரிட்டது.அதில் சுவிட்சர்லாந்து நாட்டில் 4 இலட்சம் மக்கள் இஸ்லாத்தை பின்பற்றினாலும்(ஆனால் உண்மையான எண்ணிக்கை 3 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது) அங்கு கட்டப்படும் பள்ளிகளுக்கு மினாரா கட்ட கூடாது என்று பிரசாரம் கிளம்பியுள்ளது என்றும்,மேலும்

சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் மினாராக்களை தடைச்செய்வது குறித்து விருப்ப வாக்கெடுப்பில் சுவிஸ் நாட்டவர்கள் மினாராக்களை தடைச் செய்ய ஆதரவாக வாக்களித்தனர் என்று குறிப்பிட்டு இருந்தது

இது சம்பந்தமாக நான் சமிபத்தில் திருவை பிளாக்கில் கண்ட ஒரு பதிவை இங்கு பகிர்ந்து கொள்ள மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.அது இறைவன் கிருபையால் "இந்த எதிர்ப்பு பிர‌சாரத்தில் முக்கியமாக செயல்பட்ட சுவிஸ் மக்கள் கட்சியின் முக்கிய உறுப்பினர் டானியல் ஸ்ட்ரீக் – Daniel Streiச்ஹ்‍ சமிபத்தில் இஸ்லாத்திற்கு மாறினார்.
அதை அவர் நேரடியாக தொலைக்காட்சியில் தோண்றி அதற்கான விளக்கத்தை அளித்தார்.



இஸ்லாத்தை ஏற்றமைகான காரணத்தை இவர் இப்படி குறிபிடுகின்றார் “Islam offers me logical answers to important life questions, which, in the end, I never found in Christianity,”-
நான் கிறிஸ்தவத்தில் ஒரு போதும் காணாத வாழ்க்கை பற்றிய மிகவும் முக்கியமான வினாக்களுக்கு இறுதியாக இஸ்லாம் தர்க ரீதியான பதில்களை எனக்கு தந்துள்ளது என்று கூறியுள்ளார் -

இவரை பற்றி சுவிட்சர்லாந்து தொலை காட்சி இப்படி கூறியுள்ளது He was a true SVPer and Christian. He read the Bible and regularly went to church. Now Daniel Streich, military instructor and community council member, reads the Qur’an, prays five times a day and goes to a mosque! இவர் உண்மையான SVP உறுபினராகவும், வழமையாக கிறிஸ்தவ ஆலையத்துக்கு செல்பவராகவும் , பைபிளை படிபவராகவும் இருந்த Daniel Streich என்ற இராணுவ கற்கைக்கான விரிவுரையாளர் , சமூக கவுன்சில் உறுப்பினர் இப்போது மஸ்ஜிதுக்கு செல்கிறார் , ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் தொழுகிறார் , அல் குர்ஆன் படிக்கிறார் என்று குறிபிடுகிறது

இவர் சுவிட்சர்லாந்தில் மினாராக்கள் கட்டுவதை தடைச் செய்ய வேண்டுமென்றூம், மஸ்ஜிதுகளை பூட்டவேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தை வழி நடத்தியவர் இவரின் மாற்றம் முழு மேற்கு நாடுகளிலும் பெரும் அதிர்வு அலைகளை எழுப்பி வருகின்றது என்பதுடன் இவருடன் இணைந்து இஸ்லாத்துக்கும் , முஸ்லிம்களுக்கும் எதிரான பிரச்சாரம் செய்த கட்சியின் உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்திருபதாக தெரிவிக்க படுகின்றது


. தனது கடந்த கால நடவடிக்கைகளுக்காக வெட்கப்படுவதாகவும், ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த மஸ்ஜித் கட்டுவதற்கு தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார் .


இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்பத்தில் இஸ்லாத்தை கடுமையாக எதிதவர்களால் தான் இஸ்லாம் அதிகம் வளர்ந்துள்ளது என்பதும் இஸ்லாத்தின் எதிரியாக இருந்தவர்கள்தான் அதிகம் இஸ்லாத்தை வளர்க்கும் பணிக்கு தமை அற்பணித்தார்கள் என்பதும் இஸ்லாமிய வரலாறு.