உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக....

Sunday, March 21, 2010

எதிர்த்தவர்களாக வளரும் இஸ்லாம்

சமீபத்தில் (விடியல் வெள்ளி என்று நினைக்கிறேன்) ஒரு இசுலாமிய இதழிழ் ஒரு கட்டுரை படிக்க நேரிட்டது.அதில் சுவிட்சர்லாந்து நாட்டில் 4 இலட்சம் மக்கள் இஸ்லாத்தை பின்பற்றினாலும்(ஆனால் உண்மையான எண்ணிக்கை 3 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது) அங்கு கட்டப்படும் பள்ளிகளுக்கு மினாரா கட்ட கூடாது என்று பிரசாரம் கிளம்பியுள்ளது என்றும்,மேலும்

சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் மினாராக்களை தடைச்செய்வது குறித்து விருப்ப வாக்கெடுப்பில் சுவிஸ் நாட்டவர்கள் மினாராக்களை தடைச் செய்ய ஆதரவாக வாக்களித்தனர் என்று குறிப்பிட்டு இருந்தது

இது சம்பந்தமாக நான் சமிபத்தில் திருவை பிளாக்கில் கண்ட ஒரு பதிவை இங்கு பகிர்ந்து கொள்ள மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.அது இறைவன் கிருபையால் "இந்த எதிர்ப்பு பிர‌சாரத்தில் முக்கியமாக செயல்பட்ட சுவிஸ் மக்கள் கட்சியின் முக்கிய உறுப்பினர் டானியல் ஸ்ட்ரீக் – Daniel Streiச்ஹ்‍ சமிபத்தில் இஸ்லாத்திற்கு மாறினார்.
அதை அவர் நேரடியாக தொலைக்காட்சியில் தோண்றி அதற்கான விளக்கத்தை அளித்தார்.



இஸ்லாத்தை ஏற்றமைகான காரணத்தை இவர் இப்படி குறிபிடுகின்றார் “Islam offers me logical answers to important life questions, which, in the end, I never found in Christianity,”-
நான் கிறிஸ்தவத்தில் ஒரு போதும் காணாத வாழ்க்கை பற்றிய மிகவும் முக்கியமான வினாக்களுக்கு இறுதியாக இஸ்லாம் தர்க ரீதியான பதில்களை எனக்கு தந்துள்ளது என்று கூறியுள்ளார் -

இவரை பற்றி சுவிட்சர்லாந்து தொலை காட்சி இப்படி கூறியுள்ளது He was a true SVPer and Christian. He read the Bible and regularly went to church. Now Daniel Streich, military instructor and community council member, reads the Qur’an, prays five times a day and goes to a mosque! இவர் உண்மையான SVP உறுபினராகவும், வழமையாக கிறிஸ்தவ ஆலையத்துக்கு செல்பவராகவும் , பைபிளை படிபவராகவும் இருந்த Daniel Streich என்ற இராணுவ கற்கைக்கான விரிவுரையாளர் , சமூக கவுன்சில் உறுப்பினர் இப்போது மஸ்ஜிதுக்கு செல்கிறார் , ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் தொழுகிறார் , அல் குர்ஆன் படிக்கிறார் என்று குறிபிடுகிறது

இவர் சுவிட்சர்லாந்தில் மினாராக்கள் கட்டுவதை தடைச் செய்ய வேண்டுமென்றூம், மஸ்ஜிதுகளை பூட்டவேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தை வழி நடத்தியவர் இவரின் மாற்றம் முழு மேற்கு நாடுகளிலும் பெரும் அதிர்வு அலைகளை எழுப்பி வருகின்றது என்பதுடன் இவருடன் இணைந்து இஸ்லாத்துக்கும் , முஸ்லிம்களுக்கும் எதிரான பிரச்சாரம் செய்த கட்சியின் உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்திருபதாக தெரிவிக்க படுகின்றது


. தனது கடந்த கால நடவடிக்கைகளுக்காக வெட்கப்படுவதாகவும், ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த மஸ்ஜித் கட்டுவதற்கு தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார் .


இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்பத்தில் இஸ்லாத்தை கடுமையாக எதிதவர்களால் தான் இஸ்லாம் அதிகம் வளர்ந்துள்ளது என்பதும் இஸ்லாத்தின் எதிரியாக இருந்தவர்கள்தான் அதிகம் இஸ்லாத்தை வளர்க்கும் பணிக்கு தமை அற்பணித்தார்கள் என்பதும் இஸ்லாமிய வரலாறு.

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete