உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக....

Thursday, July 29, 2010

கிளிக்கு இப்போ வேலை தேவை

சமிபத்தில் நடைப்பெற்ற உலக கால்பந்து போட்டி எந்த அளவு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்ததுதோ அதே அளவுக்கு ஜெர்மன் பால் ஆக்டோபஸ்  எந்த அணி வெற்றி பெறும் என்ற தனது கணிப்பின் முலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது. (தோல்வியடைந்த நாட்டு ரசிகர்கள் அதன் மீது கடுப்பில் இருந்தது வேற விசயம்)


Wednesday, July 28, 2010

எக்ஸெல் - ASAP UTILITIES

எக்ஸெல் UTILITY சம்பந்தமாக இணையத்தில் தேடிய போது இத்தளம் கிடைக்க பெற்றது.மிகவும் பயனுள்ள தளம்..இத்தளத்திற்கு சென்று பதிவிரக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Saturday, July 24, 2010

தட்டச்சு படங்கள்

தங்களது கற்பனை திறன் முலம் படைப்பாளிகள் தங்களது திறமை வெளி கொண்டு வருகின்றர்.இந்த படங்கள் தட்டச்சு இயந்திரம் முலம் வரைந்த படங்களாகும்.







Tuesday, July 20, 2010

இரு சக்கர வாகனம்


வித விதமான இரு சக்கர வாகணங்கள் சாலைகளில் சர்வ சாதரணமாக பார்க்கலாம்.ஒரு காலத்தில் இரு சக்கர வாகனம் வாங்குவது என்பது எளிதானது அல்ல.அதற்கு பதிவு செய்து காத்து இருக்க வேண்டும்.ஆனால் இப்பொழுது நினைத்த நேரத்தில் வாங்கி விடலாம்.

கடன் கொடுக்கவும் நிறுவனங்கள் தயாராக இருப்பதால் எல்லா தரப்பும் மக்களும் வாங்க கூடிய நிலையை இருக்கிறது.இப்போ எதற்கு ஏன் இந்த பில்டப் என்று கேட்கிறிங்களா....

Sunday, July 18, 2010

மனிதனின் திறனுக்கு எது எல்லை?







மன்னை’ மாதவன்


இயந்திரங்கள் இயங்கும் திறனை (HORSE POWER) குதிரைதிறன் என்று கணக்கிடப் படுகிறது. அந்த இயந்திரத்தை வடிவமைத்து இயக்கும் மனிதனின் திறனை எப்படி கணக் கிடுவது? மனிதனின் திறனுக்கு எது எல்லை? அளவிட முடியாத மனிதனின் திறனுக்கு வானமே எல்லை. எத்தனையோ திறன்கள் மனி தனுக்குள் புதைந்திருந்தாலும் தலை முறைகளைக் கடந்து மனிதனை அடையாளம் காட்டும் மிக முக்கியத் திறன் அவனது கற்பனைத் திறன். ஆங்கிலத்தில் கிரியேட்டிவிட்டி (Creativity) என்றும் மற்றும் படைப்பாற்றல் என்றும் பல பெயர்கள் இதற்கு உண்டு. படைப் பாற்றல் என்பது திரைப்படப் பாடல் ஆசிரியர்கள், இயக்குனர்கள் சார்ந்தது என்ற கருத்து பரவ லாக நிலவிவருகிறது.

Thursday, July 15, 2010

என் கவலைதான் மிகப்பெரியது

சகோதரர் ரொஷன் அவர்கள் கூகுள் குழுமத்திலிருந்து அனுப்பி இருந்த மெயில் நமக்கு ஒரு படிப்பினை தருவதாக இருக்கிறது.அதனால் பகிர்ந்து கொள்ள விரும்பி இங்கு தருகிறேன்

சில விஷயங்கள் உங்களைப் பாதிப்பதாகவும் கவலையளிப்பதாகவும் உள்ளதா??

Wednesday, July 14, 2010

இனிப்பான செய்தி

இனிப்பான செய்தி

டயபடீஸ் நோய்க்கு அடிக்கடி இன்சுலின் ஊசி போட்டு துன்பப்படுபவரா நீங்க?


விரைவில் உங்களுக்கென அற்புத மாத்திரை வருகிறது. 6 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும், ஆண்டுக்கணக்கில் டயபடீசை மறக்கலாம்.

Tuesday, July 13, 2010

இணையத்தில் அரட்டை


இணையத்தில் தெர்ந்தவர்களுடன் சாட்டிங் செய்வதில் காட்டிலும்,முகம் தெரியாதவர்களுடன் சாட்டிங் செய்வது தான் அதிகமாக இருக்கிறது.அதிலும் தங்களுடைய உண்மையான விவரங்களை மறைத்து எதிர்பாலினத்துடன் சாட்டிங் செய்வது பிரபலமாக இருக்கிறது..இந்த செய்திக்கு இந்த படம் போதும் என்று நினைக்கிறென்

Monday, July 12, 2010

ஐடி நகைச்சுவை

மின்னெஞ்சலில் வந்த ஐடி சம்பந்தமான நகைச்சுவை துணுக்கு.







Monday, July 5, 2010

Team Work

டீம் வொர்க் இதன் அர்த்தம் நமக்கும் புரியும்.நேர்காணலில் கூட இது சம்பந்தமாக கேள்வி கேட்கப்படும்.ஆனால் மெயில் வந்த இந்த் புகைப்படம் உண்மையான அர்த்ததை சொல்கிறது போலிருக்கு.


படத்தை பெரிதாக பார்க்க்க அதன் மீது கிளிக் செய்யவும்

Thursday, July 1, 2010

நேரத்தை நிர்வகிப்பது எப்படி?

சுகுமார் ஏகலைவ்

நம் எல்லாருக்கும் சரிசமமாக ஆண்டவனால் அளந்து கொடுக்கப்பட்ட ஒரு நாள் ரேஷன் 24 மணி நேரம்.
நேற்று என்பது செல்லாத காசோலை.நாளை என்பது பிராமிசரி நோட்டு.இன்று என்பதே கையிலுள்ள ரொக்கப் பணம்.எனவே, இன்றைய நேரத்தை எப்படிச் செலவழிக்கின்றோம் என்பதே முக்கியமான கேள்வி.

1. நேரத்தை திட்டமிடுங்கள் (Time Scheduling)

ஒவ்வொரு நாளும் காலை எழுந்தது முதல் உறங்கச் செல்லும் வரை ஒவ்வொரு 30 நிமிடத் தையும் செயல்வாரியாக, அட்டவணைப் படுத்துங்கள். உங்கள் செயல்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

அ. பயனுள்ளவை
ஆ. அன்றாடச் செயல்கள்
இ. பயனில்லாதவை

உங்கள் 24 மணி நேரத்தில் எத்தனை மணிகள் பயனில்லாதவையாக செலவழிக்கப் பட்டிருக்கின்றது என்பதை கண்கூடாக அறிய முடியும். அவற்றைக் குறைத்து பயனுள்ள நேரத்தை அதிகப்படுத்துங்கள். அன்றாடச் செயல்களிலும் தேவையான அளவு நேரத்தை மட்டுமே உபயோகப்படுத்துங்கள். இவ்வாறு பயனுள்ள நேரத்தை அதிகப்படுத்தினால் நீங்கள் ஒரு சிறந்த மனிதனாக மாறி வருகிறீர்கள் என்பது உறுதியாகிறது.

2. நேரத்தை வீணடிக்கும் நிகழ்ச்சிகள்
(Time Wasters)

நேரத்தை வீணடிக்கும் செயல்களுக்கு இரண்டு காரணங்கள் : நீங்கள் மற்றும் மற்றவர்கள்

அ. நீங்கள் காரணமாக இருக்கும் விஷயங்கள்
1. ஒத்திப்போடுதல் (Procrastination)
2. போதுமான விவரங்கள், தெளிவு இல்லாமை
3. மற்றவர்கள் மேல் பழி கூறுதல்

ஆ. மற்றவர்கள் காரணமாக இருக்கும் விஷயங்கள்
1. அன்றாட அலுவல்களில் மற்றவர்களுக்காக தேவைக்கதிகமான நேரம் செலவழித்தல்.

2. விருந்தினர், சுகமின்மை, மின் தடங்கள், மற்றும் பல.
3. பிறர் செய்யும் தவறுகள்
4. சூழ்நிலை

உகந்த நேரம் (Preferential / Prime Time)

ஒவ்வொருவருக்கும் காலை முதல் இரவு வரை ஏதாவது ஒரு குறிப்பிட்ட நேரம் உற்சாகமும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். அந்த வேளையில் மூளையும் சிறப்பாகச் செயல்படும். சிலருக்கு அதிகாலையாக இருக்கலாம். சிலருக்குப் பின்னிரவாக இருக்கலாம். உங்களுக்கு உகந்த நேரத்தில் கடினமான, முக்கியமான விஷயங்களைச் செய்தால் அது சிறப்புப் பெறும்.

காலந்தவறாமை (Punctuality)

கால தாமதம் நமது நேரத்தை மட்டுமின்றி, மற்றவர்களுடைய நேரத்தையும் வீணடிக்கிறது. சிறிது முன்கூட்டியே திட்டமிட்டுத் தயார் நிலையில் இருந்தால். காலதாமதம் ஏற்படாது. மேற்கத்திய நாடுகளில் காலதாமதம் ஒரு மன்னிக்க முடியாத குற்றமாக, கேவலமாகக் கருதப்படுகிறது. ஆனால் நம் நாட்டில் காலந் தவறாமையின் மகத்துவம் இன்னும் பலருக்குப் புரியவில்லை என்பது தான் வேதனை. காலந் தவறாமை ஒரு தலைவருக்குள்ள தகுதிகளில் முக்கியமானது.
நேரத்தை நிர்வகித்தல் (அன்றாட வேலைகள் தவிர)
உங்கள் வேலைகளை 4 வகையாகப் பிரியுங்கள்.

1. செய்தே ஆக வேண்டிய வேலை (Got to do)
இன்றேசெய்ய வேண்டிய முக்கி வேலைகள் – அவசரம்

2 செய் வேண்டிய வேலை (Need to do)
அடுத்த சில நாட்களில் முடிக்க வேண்டிய வேலைகள் – முக்கியம்
ஆனால் அவசரமில்லை.
3. செய்ய விரும்பும் வேலை (Like to do)
உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய வேலைகள் – முக்கியமும் இல்லை – அவசரமும் இல்லை.

4. செய்யக்கூடாத வேலைகள் (Not to do)

வேண்டாத குப்பைகளை, பேப்பர்களை, சேகரித்தல், தேவையற்றநீண்ட நெடிய உரை யாடல்கள், வாக்குவாதங்கள், சிந்தனைகள்.

நேரத்தை பயன்படுத்த சில குறிப்புகள்

1. ஆங்கில அகராதியில் ஓரிரு வார்த்தைகளை யாவது சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்.
2. 15 அல்லது 30 நிமிடம் மனதிற்குப் பிடித்த நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும்.
3. மறுநாளைக்கு தேவையானவற்றை தயார் படுத்த வேண்டும்.
4. தினமும் நாட்குறிப்பில் மணிவாரியாக உங்கள் செயல்களைப் பதிவு செய்யுங்கள்.
5. இன்றைய வேலையை இன்றே செய்யுங்கள். நாளைய வேலையையும் இன்றே செய்யுங்கள். ஆனால், ஒருபோதும் இன்றைய வேலையை நாளை செய்யாதீர்கள்.
6. கடினமாக உழைக்க வேண்டும் என்பதில்லை; திட்டமிட்டு, அழகாக, கவனமாக, உரிய நேரத் தில் உரிய வேலையை உளமாரச் செய்தால் போதும்
வெற்றி உங்கள் வீடு தேடி வந்து வாழ்த்தும்.

நேரத்தை – திட்டமிடுங்கள்! – பயன்படுத்துங்கள்! – கடைப்பிடியுங்கள்!


சுகுமார் ஏகலைவ்

Thanks Thannambikai